Sunday, July 28, 2013

பலரும் அறியாத தமிழக கட்டிட கலையின் தந்தை "மயன்" அவர்களை பற்றிய பதிவு.


மயன் முக்கோண விதிக் குறிப்புகள் :

மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் சடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி. இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திறம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக கணபதி சுதபதி என்ற சிற்பியும் அவரை பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.

மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன.

மூலநூல் : வானியல் மூலம் வரலாறு காண்போம்.

இது செங்கோண முக்கோணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
தே=செம்பக்கம்
சி =சின்னபக்கம்
பெ=பெரிய பக்கம் (செம்பக்கம் தவிர்த்து)

செய்முறை

* முதலில் சின்னப்பக்கத்தின் அலகை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 3/2 =1.5)

*அடுத்து பெரியப்பக்கத்தின்(செம்பக்கம் தவிர்த்து) அலகை ஏழால் பெருக்கி வரும் விடையை எட்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 4*7/8 =3.5)

*மேலுள்ள இரண்டு விடையின் கூட்டே செம்பக்கத்தின் நீளம். (எ.கா. 3.5 + 1.5 = 5 அலகுகள்)

*மேலுள்ள எளிய விதியின் படி "தே = செம்பக்கத்தை" கண்டுபிடிக்க வர்க்க மூலமோ வர்க்கமோ தேவையில்லை. ஐந்திறம் கூறுவது உண்மையாக இருப்பின் இம்மயனின் காலம் பித்தாகரசு செங்கோண முக்கோணவிதியை விட மிகப்பழைய காலமாகும். மேலும் பை(π=pi)யின் மதிப்பையும் மயன் கண்டுள்ளார். ஆனால் இச்சூத்திரத்தில் சில பித்தோகரசு மூவெண்களுடன் பொருந்துவதாவும் சில பித்தோகரசு மூவெண்களுக்கு பொறுந்தாததாகவும் உள்ளது.

குறிப்பு : பித்தகோரசு சூத்திரம் கண்டுபிடிக்கபடுவதற்க்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மயன் இதை கண்டார்.

No comments:

Post a Comment